×

கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

நீடாமங்கலம், டிச. 23: பள்ளிக் கல்வித்துறை சார்பில் டிசம்பர் 19ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அகரப் பொதக்குடி நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் கனிமொழிக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கி சிறப்பித்தார். இப்பள்ளி சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ராஜலெட்சுமி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் ஆறுமுகம், கலைபாரதி, சுந்தரி, சாமுவேல் கார் லைல் ஆகியோர் முன்னிலை வகி த்தனர். பட்டதாரி ஆசிரியர் அருள்மேரி,இடைநிலை ஆசிரியர்கள் நித்யா, நான்சி, திவ்யா, உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன் உள்ளிட்டோர் கனவு ஆசிரியர் விருது பெற்ற இடைநிலை ஆசிரியரின் கற்பித்தல் பணிகளை பாராட்டி வாழ்த்தி பேசினர். கேடயமும், நினைவுப்பரிசும் வழங்கி தலைமையாசிரியர் ராஜலெட்சுமி பாராட்டுரை வழ ங்கினார். இடைநிலை ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.

The post கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Namakkal ,School Education Department ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...